முதலையை ஜெயித்ததா காளை?

ஒரு ஊரில் ஒரு மன்னன் தன் மகளுக்கு திருமணம் செய்ய எண்ணி சுயம்வரம் ஏற்பாடு செய்து தன் பக்கத்து ஊர்களில் உள்ள இளவரசர்களுக்கு எல்லாம் செய்தி ஓலை அனுப்பினான்.

சுயம்வரம் என்றாலே கட்டிளம் காளைகளுக்கு சொல்லவா வேண்டும்.புயலென புடை சூழ வந்தார்கள்.சுயம்வர நாளில் மண்டபத்தில் அனைத்து இளவரசர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இராஜா எழுந்து தொண்டையை செருமிக்கொண்டு பேச ஆரம்பித்தார்.

எனக்கு அன்பான இளவரசர்களே என் மகளின் சுயம்வரம் நிகழ்ச்சியில் உங்களை காண்பதில் மகிழ்ச்சி.எனக்கு வரப்போகும் மருமகன் இந்த நாட்டின் வருங்கால அரசன் என்பதால் நான் என் மகளுக்கு ஒரு வீரமுள்ளவனைத்தான் மணமகனாக தேர்ந்தெடுக்க முடிவெடுத்துள்ளேன்.


இளவரசர்கள் ஆரவார ஒலி எழுப்பினார்கள்.

ராஜா மீண்டும் தொடர்ந்தார்.


சரி இந்த மணடபத்தின் அருகில் உள்ள நீச்சல் குளத்திற்கு நாம் செல்லுவோம் என்று சொல்லி அந்த நீச்சல் குளக்கரையண்டை சென்றார்.

அங்கு சென்றவுடன் இந்த குளத்தின் ஒரு முனையில் குதித்து மறுமுனை வரை நீந்தி மேலே வரவேண்டும் என்பதே என் போட்டி.இதில் வெற்றி பெறு இளைஞருக்கு என் மகளை திருமணம் செய்து கொடுப்பேன்.

இதக்கேட்டவுடன் அனைத்து இளவரசர்களும் நான் முதல்,நீ முதல் என்று போட்டியிட முடிவு செய்தனர்.ஆனால் அதற்குள் மன்னர் மீண்டும் குறுக்கிட்டு நான் இதன் நிபந்தனைகளை இன்னும் முழுமையாக சொல்லவில்லை.இந்த குளத்தில் இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடாமல் இருக்கும் 50 முதலைகள் உண்டு என்று சொல்லி முடித்ததுதான் தாமதம் எல்ல இளவரசர்களும் 10 பின்னோக்கி நகர்ந்தனர்.


இந்த சூழ்நிலையில் தான் அந்த அதிர்ச்சியான சம்பவம் நடந்தது.அது என்ன ஒரு இளவரசன் மட்டும் அந்த குளத்துக்குள் பாய்ந்து குதித்து நீந்த ஆரம்பித்தான்.

எல்லா முதலைகளும் அவனை சூழ்ந்து வந்த நிலையில் அவன் அவகளை எல்லாம் மேற்கொண்டு குளத்தின் மறுமுனையில் வெற்றி வீரனாக முதலையை வென்ற காளையக வெளியே வந்தார்.

உடனே மன்னர் ஓடிச்சென்று அந்த இளவரசனை கட்டிப் பிடித்து முத்தமிட்டு தன் மகளை கூப்பிட்டு மாலை அணிவிக்க கட்டளையிட்டார்.

ஆனால் அந்த வீர இளவரசனோ அதை ஏற்றுக்கொள்ளாமல் ராஜாவை பார்த்து சொன்னான்.மாலை போடுவதெல்லாம் இருக்காட்டும்.எனக்கு முதலில் அந்த விஷயம் தெரிந்தாகவேண்டும் என்றான்.

ராஜாவும்,மக்களும்,மற்ற இளவரசர்களும் சன்தேக குறியுடன் அவானியே வத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த இளவரசன் சொன்னான் "ராஜாவே முதலில் என்னை இந்த குளத்தில் தள்ளிவிட்டவன் யார் என்று எனக்கு நீங்கள் சொல்ல வெண்டும் என்றான்.


இதை கேட்ட அனைவரும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.ஏன் நீங்கள் சிரிக்கவில்லை.சிரிங்க ஹி ஹி ஹி ஹி

கொக்கு எப்படி இருக்கும்?

ஒரு ஊர் கோடியில் மக்கள் கூட்டம் அழுகுரலோடு அலைமோதிக்கொண்டிருந்தது.அந்த வழியே போன குருடன் ஒருவன் ஒரு மனிதனை அழைத்து இந்த அழுகையின் சத்தத்துக்கு காரணம் என்ன என்று வினவினான்.

அந்த மனிதன் சொன்னான் ஐயா ஒரு குழந்தை செத்து போய்விட்டது அது தான் இந்த சத்தத்துக்கு காரணம் என்ரு சொன்னான்.

உடனே குருடன் கேட்டான் எப்படி குழந்தை செத்தது என்று?

அந்த மனிதர்:பால் குடிக்கும் போது விக்கி செத்துப்போனது என்றான்.

குருடன்:ஐயா பால் குடிக்கும் போதா?அப்படின்னா அந்த பால் எப்படி இருக்கும்.?

அந்த மனிதர்:யோவ் பால் வெள்ளையாய் இருக்கும்

குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க,வெள்ளை எப்படி ஐயா இருக்கும்?

அந்த மனிதர்:(மிகவும் சலித்துக்கொண்டு)கொக்கு மாதிரி இருக்கும்யா.

குருடன்:ஐயா மண்ணிச்சுக்குங்க நான் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக்கறேன்.

அந்த மனிதர்:சரி கேட்டுத் தொலையா.

குருடன் :ஐயா அந்த கொக்கு எப்படி ஐயா இருக்கும்?

அந்த மனிதர்:மிகவும் கோபமாக தன் கையை வளைத்து இந்த இப்படித்தான் இருக்கும் என்று சொன்னார்.

அந்த குருடன் அந்த மனிதரின் கையை தடவிபார்த்து விட்டு ஐயா இவ்வளவு பெரிசு குழந்தை வாயில் போனா குழந்தை சாகாமல் இருக்குமா என்று கேட்டுவிட்டு நடையை கட்டினான்

பதில் சொன்ன மனிதர் தலையில் அடித்துக்கொண்டார்.

வீட்டைப் பூட்டினேனா?

42-18514422.jpg

குடும்பத்தோடு வீட்டைப் பூட்டிக்கொண்டு அவசரமாக வெளியேறும் குடும்பத் தலைவிக்கு எண்ணம் எல்லாம் வீட்டின் மீது தான் இருக்கும்.

போனவாரம் கூட பக்கத்து தெருவில் களவு நடந்தது. சென்ற மாதம் அடுத்த ஊரில் பெரிய திருட்டு நடந்தது என்றெல்லாம் அவளுடைய மனம் சிந்தித்துக் கொண்டே இருக்கும்.

மட்டுமன்றி வீட்டைப் பூட்டினேனா ? நான் குடும்பத்தோடு வந்ததை யாராவது பார்த்திருப்பார்களோ ? பக்கத்து வீட்டுக்காரன் மதில் ஏறி குதிப்பானோ என்றெல்லாம் நினைத்து நினைத்து பயணம் முடியும் வரை நிம்மதியின்றி இருப்பாள்.

அதே நேரம், ஒன்றுமே இல்லாத ஒரு வீட்டை, காலியாக இருக்கும் ஒரு வீட்டை விட்டுச் செல்வதாக இருந்தால் எந்த கவலையும் இருக்காது.

"எங்கே உங்கள் செல்வங்கள் இருக்கின்றனவோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்" என்கிறார் இயேசு.

செல்வத்தை மண்ணுலகில் சேர்த்து வைக்காமல் விண்ணுலகில் சேர்த்து வைப்பதே நல்லது என்பதே இயேசுவின் போதனை.

இவ்வுலக செல்வங்களை விட, ஈகை, அன்பு, சமாதானம், பொறுமை என நல்ல செல்வங்களை சேமிக்கும் போது அவை விண்ணரசில் நமது செயல்களாக, செல்வங்களாக சேமிக்கப்படும்.

விண்ணுலகில் நிறைய செல்வம் சேமிக்க வேண்டும் என நாம் முடிவெடுத்தால் நிறைய நல்ல செயல்களை செய்யும் ஊக்கம் வரும். எனவே விண்ணக செல்வங்களை சேமியுங்கள் என்கிறார் இயேசு.

விண்ணுலக செல்வங்களை திருடர் திருடுவதில்லை, பூச்சியோ துருவோ அழிப்பதில்லை என்கிறார் இயேசு.

நிலையான வாழ்வுக்குரியது விண்ணக செல்வங்களே.

வானத்துப் பறவைகளைப் போல சுதந்திரமாய் பறக்கலாம் மனம் இலகுவாய் இருந்தால். உலக செல்வ ஆசைகளினால் கால்களில் இயந்திரக் காலணிகளை அணிந்து கொண்டால் பறப்பது இயலாது.

எனவே, சிந்திப்போம்.

தேவையானது எது ?

உண்மை, அன்பு, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், பொறுமை, இறையன்பு எனும் உயரிய கொள்கைகளைக் கொண்டு விண்ணக வீட்டில் செல்வங்களைச் சேமிப்போம்.

விண்ணுலக வாழ்வுக்கான தயாரிப்புக் கூடமாகட்டும்
மண்ணுலக வாழ்வு.

http://jebam.wordpress.com/2008/02/25/money/

சென்னையில் வீட்டு வாடகை உயர்வு - விளைவுகள்

சென்னையில் வீட்டு வாடகை உயர்வு - விளைவுகள்
அங்கே என்ன ஏலம் நடக்குது?வாடகை வீடுதான். யாரு அதிகமா 'வாடகை' ஏலம் எடுக்கறாங்களோ, அவுங்களுக்கு வீடு கொடுப்பாங்களாம்.---பாஸ், இவரை கடத்தலாமா, சொந்த வீடு வெச்சிருக்காரு?லூசாப்பா நீ, அவரை விடு. இவரைப் பாரு. வாடகை குடுத்துண்டு ஒரு வீட்டிலே இருக்காரு. நினைச்சிப் பாரு, எவ்ளோ பணமிருக்குமின்னு.---நயா பைசா வரதட்சிணை வேண்டாம்னு சொன்ன மாப்பிள்ளையை வேண்டாம்னுட்டியாமே? ஏன்?வரதட்சிணைக்குப் பதிலா 5 வருஷத்துக்கு அவர் வீட்டு வாடகையை நான் குடுக்கணுமாம். கட்டுப்படியாகுமா?---எல்.ஐ.சியின் 'ஜீவன் வாடகை' பாலிசி.5 வருஷத்திற்கு சிறிய ப்ரிமியம் கட்டுங்க. பிறகு உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்கள் வாடகையை எல்.ஐ.சி கட்டும்.---வழியில் கிடந்த ஒரு விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் வந்ததுஏதாவது ஒரு வரம் கேள்.எனக்கு ஒரு பெண்ணின் மனசில் என்ன நினைக்கிறான்னு தெரியணும்.அது ரொம்ப கஷ்டம்பா. அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு கடவுளுக்கே கூட தெரியாது. வேறே ஏதாவது கேளு.ஓகே. சென்னையில் ரெண்டு வருஷத்திற்கான என் வீட்டு வாடகையை எனக்கு கொடுத்துவிடு.(பூதம் ஒரு நிமிடம் யோசித்து)... சரி... எந்த பெண் மனசைப்பத்தி உனக்கு தெரியணும்?

http://boochandi.blogspot.com/2008/03/blog-post_27.html